வாங்க! வாங்க!
வணக்கம்.
அனைவரும் நலமா? :)
என் விடுமுறை இனிதே அமைந்தது :). விடுமுறையில் வந்த இரு கதைகளையும் நீங்களும் குழந்தைகளும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)'
அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை
இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)':
அகலப்பட்டை - 512 kb:
அகலப்பட்டை 150 kb:
-------------------------------------------------------------------------------------------------
என் பிள்ளை இன்னும் இதைக்கேட்கவில்லை.சுடச்சுட, சுட்டு, உங்களுக்கும், குழந்தைகளுக்கும் தந்துள்ளேன். :)
தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.
என் பிள்ளைக்கு இதைக்காட்டியவுடன் அவன் உரையாடலை இங்கே, பதிவேற்றுகிறேன்.
நன்றி. :)
சென்ற இரு கதைகளின் சுட்டி கீழே:
4. என் சிற்றுண்டி
3. விளையாடும் நேரமிது
பி.கு.:இந்தக் கதை, ஒரு வயதிலிருந்து ஏழு வயதுவரை உள்ள குழந்தைகளுக்காக என்பதால், இன்றைய கதையை, மிகக்குட்டி, வாண்டுகளுக்கு, பெரியவர்கள்தான், அவர்களுக்குப் புரியும் வகையில் மறுபடி சொல்ல வேண்டி இருக்கும் என நினைக்கிறேன் :). தங்கள் அனுபவத்தையும் எனக்குத் தெரிவியுங்கள்.
இன்றைய கதையில், இனிவரும் கதைகளின் போக்கில், மாற்றம் ஏதுவும் வேண்டுமெனில், பின்னூட்டமாய்ப் பின்னுங்களேன். நன்றி:)
குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'
Saturday, September 20, 2008
என் அம்மாவுக்காக...:) - வண்டு-சிண்டு கதை 5
at 01:05 19 comments
Labels: என் அம்மாவுக்காக, சிண்டு, வண்டு
Friday, September 5, 2008
வண்டு, சிண்டு - என் சிற்றுண்டி
வாங்க வாங்க.
எல்லாரும் எப்படி இருக்கீங்க? :))
இன்றைய கதை... 'என் சிற்றுண்டி'
அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:
அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:
===================================================================== கதை கேட்ட என் பிள்ளை: Mom! Can you tell me the story again in english?
ரங்கமணி : ரொம்பத் தமிழ்ல பேசீட்ட? Explain him
Volume mute செய்து, படத்தை ஓட்டி, மறுபடியும் ஆங்கிலத்தில் Story சொன்னேன் :)
பிள்ளை : yeah! I know, Cow gives us milk and...eggs comes from hen :)))) Mom! can you do an jungle adventure for me?
நான்: சரி! செய்கிறேன்
இப்ப மதுரையில் நான் எங்கு போய் Jungle தேடுவேன் :-0. UK திரும்பிப் போனால் அங்கே, இலையுதிர்க் காலம் ஆரம்பித்துவிடும்.ம்ம்ம்ம்....சொக்கா! நான் என்ன செய்வேன்.....
மக்கா! நான் என்ன செய்ய????? ==================================================================== :))).தங்கள் நண்பர்களே! தங்கள் கருத்துகளையும், குழந்தைகளின் கேள்விகளையும் எனக்குத் தெரிவியுங்கள்.
பி.கு.: தற்பொழுதும் விடுமுறையில் தான் உள்ளேன் :).
at 12:01 13 comments
Labels: என் சிற்றுண்டி, சிண்டு, வண்டு