வாங்க வாங்க.
அனைவரும் நலமா? :)
சென்ற முறை கேட்ட பஞ்சதந்திரக் கதை பிடித்திருந்ததா?
இந்த வாரமும் ஒரு கதை கேட்கப்போகிறீர்கள் :). அதுவும் 'கிறிஸ்து பிறந்த கதை' கேட்கப் போகிறீர்கள். இன்னும் 10 நாட்களில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் போகிறோம் அல்லவா? அதனால், இந்தக் கதை, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் :)
கேட்டு மகிழுங்கள்.
இன்றைய கதை.....'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'
அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை
இன்றைய கதை.....'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்' :
அகலப்பட்டை - 512 kb:
அகலப்பட்டை 150 kb:
=================================================================
தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).
நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
அனைவருக்கும் மனம்கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் :)
குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'
Monday, December 15, 2008
வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்' :) - கதை 11
at 18:29 7 comments
Labels: கதை 11, கிறிஸ்துமஸ் வாழ்துகள், சிண்டு, வண்டு
Monday, December 1, 2008
வண்டு - சிண்டு , 'நரியும் குரங்குகளும்' - கதை 10
வாங்க வாங்க.
அனைவரும் நலமா? :)
சென்ற முறை பாடிய பாடல்கள் பிடித்திருந்தனவா?
இந்த வாரம் ஒரு கதை கேட்கப்போகிறீர்கள் :).
கேட்டு மகிழுங்கள்.
இன்றைய கதை.....'நரியும் குரங்குகளும்'
அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை
இன்றைய கதை.....'நரியும் குரங்குகளும்' :
அகலப்பட்டை - 512 kb:
அகலப்பட்டை 150 kb:
=================================================================
தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள், பாடல்கள், நடனங்கள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).
நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
at 20:26 21 comments
Labels: கதை 10, சிண்டு, நரியும் குரங்குகளும், வண்டு
Monday, November 17, 2008
வண்டு - சிண்டு , 'அணிலும் மழையும்...' - கதை 9
வாங்க வாங்க.
அனைவரும் நலமா? :)
சென்ற முறை பாடிய பாடல்கள் பிடித்திருந்தனவா? தோசைப் பாடலும், பலூன் பாடலும் உங்களை மகிழ்வித்தனவா? :)
இந்த வாரமும் பாடல்கள் வாரமே :). கண்டு, கேட்டு மகிழுங்கள்.
இன்றைய கதை.....'அணிலும் மழையும்...'
அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை
இன்றைய கதை.....'அணிலும் மழையும்...' : அகலப்பட்டை - 512 kb:
அகலப்பட்டை 150 kb:
================================================================= தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள், பாடல்கள், நடனங்கள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).
நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
at 22:39 14 comments
Labels: அணிலும் மழையும், கதை 9, சிண்டு, வண்டு
Tuesday, November 4, 2008
வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க' கதை 8
வாங்க வாங்க.
அனைவரும் நலமா? :)
தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாய்க் கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அம்மா செய்த பலகாரங்களும், அப்பாவுடன் வெடித்த வெடிகளும் புத்தாடகளும் மனம் முழுவதும் நிரம்பியிருக்கா? :)
அதே மகிழ்ச்சியுடன்.......
இன்றைய கதை.....'பாடலாம் வாங்க ::)'
அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா?
யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை
இன்றைய கதை.....'பாடலாம் வாங்க ::)' :
அகலப்பட்டை - 512 kb:
அகலப்பட்டை 150 kb:
==================================================================
என் பிள்ளை, இதில் பங்குகொண்டுவிட்டு, மீண்டும் பிஸியாகிவிட்டான் :-). இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் அவன் கருத்துகளைக் கூறுகிறேன்.
படம் ஒளிப்பதிவு செய்யும் போது அவன் சொன்னது:
Mom! i like it very , very , very , very , very , very much. Its nice.
நான்: :D
=================================================================
தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
at 01:48 21 comments
Labels: கதை 8, சிண்டு, தமிழ் பாடல்கள், பாடலாம் வாங்க, வண்டு
Tuesday, October 21, 2008
வண்டு - சிண்டு; கதை 7 வெளிவந்துவிட்டது - காணத்தவறாதீர்கள் ;)
கதை இங்கே
:). நன்றி.
at 16:24 0 comments
Labels: சிண்டு கதை 7 சுட்டி, வண்டு
வண்டு - சிண்டு தீபாவளி வாழ்த்துகள்
வணக்கம்.
அனைவரும் நலமா? :)
பொறுமையாய்க் காத்திருந்தமைக்கு நன்றி.
ஆனால், இன்னும் பொறுமை (எனக்கும்) வேண்டும் போலிருக்கிறது.
கதை தயார், ஆனால், வலை ஏற்றம் செய்ய வேண்டிய, 'யூ-டியூப்' Under maintenance-ல் இருக்கிறது.
தற்பொழுது, வீடியோ வலையேற்றம் செய்ய இயலாமல் இருக்கிறேன்.
நாளை, முதல் வேலையாய்ச் செய்கிறேன், செவ்வாய் இரவோ, புதன் காலையோ, கண்டிப்பாய் வரும். :)
நன்றி மக்கா. இப்பொழுது, மணி இரவு 3:30. Technical-ஆய் ரொம்ப பட்டுவிட்டேன். காலை சந்திப்போம். :))..
ZZZZzzzzzzzzzzzzz...
at 03:23 3 comments
Labels: ZZzzzz, சிண்டு, தீபாவளி வாழ்த்து, வண்டு
வண்டு - சிண்டு கதை 7 - காணத்தவறாதீர்கள் ;)
வணக்கம்.
அனைவரும் நலமா? :)
பொறுமைக்கு நன்றி :)
வண்டு-சிண்டு கதைகள் சனிக்கிழமைகளிலிருந்து செவ்வாய்க்கு மாறிய பின் வரும் முதல் கதை / வாழ்த்து இது.ஆம். அடுத்த வாரம் வரும் தீபாவளிக்கான, முன்னோட்டம் இது :)
வண்டு - சிண்டுவின் தீபாவளி வாழ்த்துகள்:
பாகம் 1/3:
பாகம் 2/3 :
பாகம் 3/3:
இந்த முறை சற்று (!!!) நீளமான படம் தான். ஆனால் குழந்தைகளுக்கு, அவசரமில்லாமல், மீண்டும் வீடியோ பார்த்து அல்லது பார்த்துக் கொண்டே வாழ்த்தட்டை தயாரிக்க உதவ வேண்டும் என்றே, நீட்டி விட்டேன்.
தங்கள் கருத்துகளையும், குழந்தைகளின் எண்ணங்களையும் எனக்கு, கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.
அவர்கள் தயார் செய்த வாழ்த்து அட்டையையும் 'ஸ்கேன்' (scan) செய்து எனக்கு அனுப்புங்கள். அக்டோபர் 28, தீபாவளிக்கு மறு நாள் வரை எனக்கு அனுப்புங்கள்.மறக்காமல், குழந்தையின் பெயர், வயது மற்றும் பெற்றோர் பெயர் குறிப்பிட்டு அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி : PudhuVandu@gmail.com
எல்லாவற்றையும் சேர்த்து, நாம் ஒரு பெரிய வாழ்த்தட்டை, தயாரிப்போம் சேரியா? :))
நன்றி.
பி.கு: இந்த வீடியோவை 'யூ-டூயுப்'-ல் ஏற்றுவதற்குள் கன்னாபின்னாவென்று பட்டுவிட்டேன். அதிகபட்சம் ஒரு வீடியோ 10 நிமிடம் தான் இருக்கலாமாம் :((
சரி என்று ஒருவழியாய், 3 வீடியோவாய்ப் பிரித்தால், 'யூ-டியூப்' Under maintenance-ல் சென்று விட்டது :((((. என்னத்தைச் சொல்ல.
at 01:54 9 comments
Labels: சிண்டு, தீபாவளி வாழ்த்து, வண்டு
Friday, October 17, 2008
வண்டு - சிண்டு இனி செவ்வாய் தோறும்
வணக்கம். :)
அனைவரும் நலமா?
இனி வண்டு-சிண்டு கதைகள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமைகளில் அல்லாமல், செவ்வாய்க்கிழமையில் வரும். நாளில் மட்டுமே மாற்றம்.
பெரிய காரணம் ஒன்றும் இல்லை. வார நாளில் வெளியிட்டால், தயாரிப்பை வார இறுதிகளில் செய்ய முடிகிறது.அப்பொழுது, இன்னோருவரின் உதவியும் கிடைக்கிறது. ஒரே நபராய், படங்கள் எடுப்பது, சில நேரங்களில் கடினமாய் (கடுப்பாய்) உள்ளது :)
வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்போமா? நன்றி.
இதில் ஏதும் மாற்றம் வேண்டுமெனில் பின்னூட்டமிடுங்கள்.
கதையிலோ...
கதை சொல்லும் விதத்திலோ...
அல்லது வேறு ஏதிலும் நீங்களோ உங்கள் குழந்தைகளோ, அது வேண்டும் இது வேண்டும் என்று நினைத்தீர்கள்/கேட்டார்களானால் எனக்குத் தெரிவியுங்கள்.
நன்றி. :)
at 21:31 2 comments
Labels: சிண்டு, செவ்வாயில், வண்டு
Monday, October 6, 2008
ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..-வண்டு சிண்டு கதை 6
வாங்க வாங்க.
அனைவரும் நலமா?
பொறுமையாய்க் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. :))
இன்றைய கதை.....'ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..'
அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை
இன்றைய கதை.....'ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..':
அகலப்பட்டை - 512 kb:
அகலப்பட்டை 150 kb:
==================================================================
என் பிள்ளை இன்று பள்ளி சென்ரு வந்து தூங்கிவிட்டான்.இன்னும் இந்தக் கதையை அவன் கேட்கவில்லை(சென்ற கதை உட்பட.பள்ளியில் பயங்கர பிஸி-யாம் அவர் :)) )
=================================================================
தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.
நன்றி.
தொடர்ந்து, பொறுமையாய், கதை கேட்டு, எனக்கு ஊக்கமளித்து, பின்னூட்டமிட்டு, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நல்லுள்ளங்களுக்கு சிறப்பு நன்றி.குறிப்பாய் ராமலக்ஷ்மி, சீனா ஸார் மற்றும் தம்பி தமிழ் பிரியனுக்கு :)
நிலா பாப்பா, ஏன் கொஞ்ச நாளாக் காணும். யாராவது கேட்டு சொல்லுங்களேன்.
நன்றி.
at 23:25 30 comments
Saturday, September 20, 2008
என் அம்மாவுக்காக...:) - வண்டு-சிண்டு கதை 5
வாங்க! வாங்க!
வணக்கம்.
அனைவரும் நலமா? :)
என் விடுமுறை இனிதே அமைந்தது :). விடுமுறையில் வந்த இரு கதைகளையும் நீங்களும் குழந்தைகளும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)'
அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை
இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)':
அகலப்பட்டை - 512 kb:
அகலப்பட்டை 150 kb:
-------------------------------------------------------------------------------------------------
என் பிள்ளை இன்னும் இதைக்கேட்கவில்லை.சுடச்சுட, சுட்டு, உங்களுக்கும், குழந்தைகளுக்கும் தந்துள்ளேன். :)
தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.
என் பிள்ளைக்கு இதைக்காட்டியவுடன் அவன் உரையாடலை இங்கே, பதிவேற்றுகிறேன்.
நன்றி. :)
சென்ற இரு கதைகளின் சுட்டி கீழே:
4. என் சிற்றுண்டி
3. விளையாடும் நேரமிது
பி.கு.:இந்தக் கதை, ஒரு வயதிலிருந்து ஏழு வயதுவரை உள்ள குழந்தைகளுக்காக என்பதால், இன்றைய கதையை, மிகக்குட்டி, வாண்டுகளுக்கு, பெரியவர்கள்தான், அவர்களுக்குப் புரியும் வகையில் மறுபடி சொல்ல வேண்டி இருக்கும் என நினைக்கிறேன் :). தங்கள் அனுபவத்தையும் எனக்குத் தெரிவியுங்கள்.
இன்றைய கதையில், இனிவரும் கதைகளின் போக்கில், மாற்றம் ஏதுவும் வேண்டுமெனில், பின்னூட்டமாய்ப் பின்னுங்களேன். நன்றி:)
at 01:05 19 comments
Labels: என் அம்மாவுக்காக, சிண்டு, வண்டு
Friday, September 5, 2008
வண்டு, சிண்டு - என் சிற்றுண்டி
வாங்க வாங்க.
எல்லாரும் எப்படி இருக்கீங்க? :))
இன்றைய கதை... 'என் சிற்றுண்டி'
அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:
அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:
===================================================================== கதை கேட்ட என் பிள்ளை: Mom! Can you tell me the story again in english?
ரங்கமணி : ரொம்பத் தமிழ்ல பேசீட்ட? Explain him
Volume mute செய்து, படத்தை ஓட்டி, மறுபடியும் ஆங்கிலத்தில் Story சொன்னேன் :)
பிள்ளை : yeah! I know, Cow gives us milk and...eggs comes from hen :)))) Mom! can you do an jungle adventure for me?
நான்: சரி! செய்கிறேன்
இப்ப மதுரையில் நான் எங்கு போய் Jungle தேடுவேன் :-0. UK திரும்பிப் போனால் அங்கே, இலையுதிர்க் காலம் ஆரம்பித்துவிடும்.ம்ம்ம்ம்....சொக்கா! நான் என்ன செய்வேன்.....
மக்கா! நான் என்ன செய்ய????? ==================================================================== :))).தங்கள் நண்பர்களே! தங்கள் கருத்துகளையும், குழந்தைகளின் கேள்விகளையும் எனக்குத் தெரிவியுங்கள்.
பி.கு.: தற்பொழுதும் விடுமுறையில் தான் உள்ளேன் :).
at 12:01 13 comments
Labels: என் சிற்றுண்டி, சிண்டு, வண்டு
Sunday, August 24, 2008
சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'...3-ஆம் கதை
'சிண்டுவின் - விளையாடும் நேரமிது'
வாங்க வாங்க.
அனைவரும் நலமா? :)
பெரியவர்களும் குட்டீஸும் தயாரா!
வழக்கம் போல், புதிதாக வருபவர்களுக்காவும் நமக்காகவும், வண்டு-சிண்டு அறிமுகக் கதை, பேட்போமா?. யார் வண்டு, யார் சிண்டு-னு இன்னொரு முறை தெரிஞ்சுப்போமே :)))
அதற்கு இங்கே கிளிக்குங்கள்
இந்த வாரம் நாம் பார்க்கப்போவது .......
'சிண்டுவின் - விளையாடும் நேரமிது' ....பார்ப்போமா?
அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :
அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps :
==================================================================
பிள்ளை: Mom! is that my badge? (அந்த பாட்ஜ் அவன் பள்ளியில் கொடுத்தது :) )
நான் : ஆமாம். உன்னுடையது தான்.
பிள்ளை: Why is vandu wearing it? who gave it to him? Did you give it?
நான் : ம்
பிள்ளை: Are those toys all mine? Did chindu really drive the train? Where is my dinasour now?
நான் : ......
====================================================================
ஆஹா! இந்த முறை, பிள்ளை, கதையை,சட்டை செய்யவே இல்லை :( . அவன் விளையாட்டுச் சாமான்களைத்தான் சிண்டு விளையாடியதா என்பதையேக் கேட்டுக் கொண்டிருந்தான்.
மக்கா! நல்லுள்ளங்களே! இந்த முறை கதை எப்படின்னு நீங்களாவது சொல்லுங்க. மூன்றாவது கதையிலேயே போர் அடுச்சுடுச்சா :-0.
வாங்க வாங்க.வந்து உண்மையச் சொல்லி என்னையக் காப்பாத்துங்க....:))
பெரியவர்களும் , குழந்தைகளும் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள். தற்போது நான் ஊரில் இல்லையென்றாலும், அப்போ அப்போ எட்டிப்பார்ப்பேன்.
ஆமா !சொல்லிப்போட்டேன். :)))
நன்றி! நன்றி! நன்றி!
பி.கு.: நந்து ஸார்! நிலாக் குட்டிக்கு, Happy sun-லேர்ந்து ஸ்டார் எடுத்து, உங்க நற்கரங்களால் நீங்களே கொடுத்துடுறீங்களா???? :))))). நன்றி. :)
பி.கு 2: நான் ஊரில் இல்லையென்றாலும், கதைகள் சொன்ன நேரத்திற்கு வரும் என்று நான் சொன்னதை, எங்கள் வீட்டு மின்சாரம் படிக்க மறந்துவிட்டது.அது தான் 4 மணி நேரத் தாமதத்திற்குக் காரணம். :((.
ஆனா, வந்துட்டோம்ல :)))
at 19:00 14 comments
Labels: சிண்டு, சிண்டுவின் விளையாடும் நேரமிது, வண்டு
Friday, August 8, 2008
வண்டு - சிண்டு 'டைகரின் பிறந்தநாள்' - இரண்டாம் கதை
வாங்க வாங்க! நலமா? :)
குழந்தைகளுக்கான படக்கதைகளில் என்னுடைய இரண்டாம் முயற்சி.....
'டைகரின் பிறந்தநாள்'.
அதற்கு முன், வண்டு-சிண்டு அறிமுகப்பகுதியைப் புதிய குழந்தைகளுக்காகவும், உங்களுக்காவும் இன்னொருமுறை பார்ப்போமா? யாரு வண்டு, யாரு சிண்டு-னு இன்னோருவாட்டி தெரிஞ்சுப்போமே :)
வண்டு-சிண்டு அறிமுகம் இங்கே
இப்ப, 'டைகரின் பிறந்தநாள்'.
அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:
அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:
*************************************************************************************
கதை கேட்டதும் என் பிள்ளையுடனான உரையாடல்:
பிள்ளை: (very seriously) Mom! why is vandu crying? :(
நான் : வண்டுக்கு வயிறு வலிக்குது. அதான் அழறான்.
பிள்ளை: (thinking very deeply). But why is he crying? :(
நான் : நெறைய சாக்லேட் சாப்பிட்டதுனால வயிறு வலிக்குது.அதான் வண்டு அழுது.
பிள்ளை: (seriously) But why did he eat loads of them? :(
நான் : நிறைய சாக்லேட் சாப்பிடக் கூடாதுன்னு வண்டுக்குத் தெரியல அதான்.
பிள்ளை: But why didn't, tiger and chindu tell him, not to eat loads of choclates?
நான் : ம்ம்ம்....சிண்டும், டைகரும் அப்போ அங்க இல்ல. எல்லாரும் வேற ரூம்ல இருந்தாங்க. அதனால யாரும் வண்டு சாக்லேட் சாப்பிடறதப் பாக்கல..
பிள்ளை: (more seriuosly) Oh mom! but, why is vandu crying and why did he eat so much choclates?
நான் : ............................................
*************************************************************************************
கதை கேட்டதும் உங்கள் கருத்துகளுடன், உங்களுடன் கதை கேட்ட குழந்தைகளின் கேள்விகளையும், கருத்துகளையும் சேர்த்து பின்னூட்டமிட்டால், மேலும் மகிழ்வேன்.
தொடர்ந்து கதை கேட்க வாங்க. இதே கதையையும் , முந்தையக் கதைகளையும் அடுத்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை, மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும், குழந்தைகள் கேட்கும்வரை, இங்கே வந்து, அவர்களுக்கும் காட்டுங்கள்.
ஒரு புதிய கதையுடன் ஆகஸ்ட் 23, 2008-ல் உங்களை, சந்திக்கிறேன். மகிழ்ச்சி. :)
பி.கு.: ஒரு மூன்றரை வாரத்துக்கு புதுவண்டு வீட்டவிட்டு எஸ்கேப் ஆகப்போகுது. ஆனா, வண்டு சிண்டு கதை கண்டிப்பா சொன்ன நேரத்துக்கு வரும் :).
பின்னூட்டம் பார்க்கவும் அப்போ அப்போ புதுவண்டு பறந்து வரும். அதுவரைக்கும் எல்லாரும் உங்க வலைப்பூவோட என் வலைப்பூவையும் சேர்த்து பத்திரமாப் பாத்துக்குங்க. ஆமா! சொல்லிட்டேன் :P :)))).
முதல் கதை: இது என்ன கலாட்டா?
at 15:25 32 comments
Labels: குழந்தைக்கதைகள், சிண்டு, டைகரின் பிறந்தநாள், வண்டு
Friday, July 25, 2008
வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?' : முதல் கதை :)
வண்டு - சிண்டுவின் முதல்க் கதை :-).
வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?'
அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:
அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:
-------------------------------------------------------------------------------------------------
இதைப் பார்த்தவுடன் என் பிள்ளையின் கேள்விகள்:
பிள்ளை: Mom! Can i see it again?
நான் : சரி. பாரு.
பார்த்தபின்
பிள்ளை: Mom! I always tidy up. Am i a good boy?
நான் : ஆமா. டைடியப் பண்ணின நீ குட் பாய் தான்.
பிள்ளை: Did you clean up the kitchen?
நான் : Nope. I forgot.
பிள்ளை: If you tidy up, i will say u r a good girl. Can u do it now?
நான் : :-) சரி! இப்பவே செய்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
தங்கள் கருத்துகளையும் தங்கள் குழந்தைகளின் கருத்துகள், கேள்விகளையும் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். அடுத்த கதை இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஒரு புதிய கதை.
அதுவரை, இந்தக் கதையைக் குழந்தைகள், எத்தனை முறை வேண்டுமானாலும், இங்கே வந்து வந்து பார்க்கலாம்.
நன்றி.
at 22:11 35 comments
Labels: குழந்தைக் கதைகள், சிண்டு, தமிழ்க் கதைகள், வண்டு, வண்டு சிண்டு
Sunday, July 20, 2008
வாங்க! வாங்க! வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங்க :)
எல்லாருக்கும் வணக்கம்! :)
வருகை தந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி.
இது என்னுடைய சிறிய முதல் முயற்சி. என்னுடைய 4 1/2 வயது மகனுக்காக, சொல்ல நினைத்துத் துவங்கியது, இப்பொழுது உங்கள் முன்னால்.
அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :
அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:
இரண்டு வாரத்திற்கு ஒரு கதை என்று, இப்பொழுது நீங்கள் பார்க்கும் இந்த வடிவிலேயே கதை சொல்லப்படும்.
தமிழில் கதை இருக்க வேண்டும், குழந்தைகள் தமிழில் 'டிஜிடல் ஸ்டோரி' கேட்க வேண்டும் என்பதன் முயற்சியே இது.
1-லிருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான, கதைக்கரு சொல்லப்படும். ஆர்வமுள்ள, வண்டு-சிண்டுவைப் பிடித்த மற்ற குழந்தைகளும், குழந்தயுள்ளம் கொண்ட எல்லாப் பெரியவர்களும், வந்து கேட்டால், மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்.
தங்களின், ஊக்குவிப்பை, பின்னூட்டமாய் இட்டுச் செல்ல வேண்டுகிறேன்.
நிறை, குறை, பிடித்தவை, மிகவும் பிடித்தவை, சற்றுக் குறைவாய்ப் பிடித்தவை :) மற்றும் உங்கள் எண்ணங்கள் என்னவோ அதையும், இந்தப் படக்கதை கேட்ட உங்கள் குழந்தைகளின் கேள்விகள் என்னவோ அதையும் எனக்குத் தெரிவியுங்கள். :).
குழந்தைகளும் நீங்களும் எப்பொழுது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து இந்த வலைப்பூவில் கதை கேட்கலாம். :-)
நன்றி!
-இப்படிக்கு,
புதுவண்டு.
பி.கு.: என் மின்னஞ்சல் : pudhuVandu@gmail.com.
எல்லாக் கதைகளையும், இந்த வலைப்பூவின் வலதுபுறத்தில் உள்ள உரல்களின் மூலம் பார்க்கலாம்.
at 23:27 47 comments
Labels: chindu, NewBee, vandu, கதை, சிண்டு, தமிழ்க் கதைகள், படக்கதை, வண்டு
Monday, April 7, 2008
நேற்று பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா
இப்படியே இருந்து விட்ட பச்சை மைதானம்...
குடம் குடம் என குடித்துவிட்டன குங்குமப்பூவை...
பொழுதன்றும் ஏறிஇறங்கிய தோட்டப்படிகட்டு...
பொசுக்கென்று போர்த்தியது பஞ்சுப் போர்வை...
நாணமாய் சிவந்து விட்டது நேற்று மட்டும்...
நேற்றுப் பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா...
நேற்று மட்டும் பதிந்திருந்த என் காலடித்தடம்...
எல்லாமே மாறிப்போனது நேற்று மட்டும்...
ஒலிக்கும்... ...
at 11:19 4 comments
Labels: NewBee, photo kavithai, snow, படக் கவிதை, பனி, புதுவண்டு, வண்டு
Tuesday, March 25, 2008
வாழ்க்கைத் தண்டவாளத்தின் வானவில் வரைபடங்கள்
| **குருகுலத்தின் பெயர் - வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளியிருந்த convent ‘Holy Trinity’. |
| **படித்தது - ஒண்ணாப்பில் இருந்து ஐந்தாப்பு. |
| **பிடித்தது - Sylvester master வாசித்த guitar; Srinivas master நடனக்குழுவில்,‘கோபியர் கொஞ்சும் ரமண’-னாய், தேறிய நாள்;ஒவ்வொரு சனிக்கிழமையும், தொடரும் ஞாயிரும். |
| **பசுமரத்தாணியாய்ப் பதிந்த பாடங்கள்- அப்படி எதுவும் இருந்ததாய், என் ‘சரித்திர, புவியியல், அறிவியல், கணித’-த்தை, ஞாபகமாய் மறந்த ஞாபகத்தில் சத்தியமாய், எதுவும் இல்லை. |
இப்படி, சிங்காரச்சென்னையின், புஷ்பக விமானத்தில் (‘ரிக்ஷா’), RNV-யாய் வலம் வந்த எனக்கு ... ...ஆறாம் வகுப்பில் தான், நான் வசித்த ஆசியாக்கண்டமே, அதிராமல் அதிர்ந்தது. தமிழாசிரியையாய், என் தாய் பணியாற்றிய குருகுலத்தில் எனக்கு இடம் கிடைத்தது.
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.’
எவ்வளவு முயன்றும், இந்தக்குறளை, என் தாய்த்தமிழாசிரியை, என் உடன்பிறப்பு, சக மாணவர்கள், எனக்குப் பாடம் உரைத்த ஆசிரியர்கள் மற்றும் 7-ஆம், 8-ஆம், 9-ஆம்.. .. ..12-ஆம் வகுப்பு அனைத்திற்கும் பாடமளித்த ஆசிரியர்கள்; இவர்கள் யார் மனத்திலிருந்தும், என்னால் அழிக்க முடியவில்லை.
‘விளைவு?’
‘போர், போர், உக்கிரமான போர்
ஒரு நாளல்ல, இரு நாளல்ல
மாபெரும் மகதத்தின் மானம் பறிபோகும் விதத்தில்
சின்னஞ்சிறு கலிங்கம், 120 நாட்கள், போர் நடத்திற்று’
-நன்றி! பள்ளியின் ‘அசோகர்’ நாடகத்தின் முன்னுரை எழுதிய என் தாய்க்கு - 1988
அசோகரின் போரைவிட, இந்த வண்டின் போர்க்களம், மிகக்கொடூரமாய் இருந்தது, 10 ½ வயதில். :(
‘படிக்க வேண்டும், படிக்க வேண்டும், உக்கிரமாய்ப்படிக்க வேண்டும்
ஒரு நாளல்ல; இரு நாளல்ல;
மாபெரும் படிப்புக்குடும்பத்தின் மானம் காக்கும் வகையில்
சின்னஞ்சிறு வண்டு 7 வருடங்கள், போர் நடத்திற்று.’
-நன்றி! பள்ளியின் ‘அசோகர்’ நாடகத்தின் முன்னுரை எழுதிய என் தாய்க்கு - 1988
‘விளைவு?’
5 வருடங்களுக்குப்பின் SSLC பொதுத்தேர்வில், பள்ளியின் top scorer.. .. ..வண்டு.
என் வாழ்க்கைத் தண்டவாளத்தில், வானவில்லில் வரைந்த வரைபடங்கள் சில உண்டென்றால், அதில் இதுவும் ஒன்று;
என் வாழ்க்கைத் தண்டவாளத்தில், வெற்றியூர் செல்ல வாய்ப்புகள் சில வந்ததென்றால், அதற்குக் காரணம், நான் கற்ற முதல் பாடம் - ‘முயற்சி திருவினை ஆக்கும்’
ஒலிக்கும்... ...
at 10:43 0 comments
Labels: bee, NewBee, school days, SSLC, top scorer, பள்ளி, புதுவண்டு, வண்டு, வாழ்க்கைத்தண்டவாளம்
Sunday, March 23, 2008
தாய் தந்த அறிமுகம்
என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு எனக்கு சிறகுகள் வேண்டும்.;அச்சிறகுகள் பறப்பதற்கு என் சிந்தனை தூண்டு கோலாகும்.
பறக்கும் இந்த வண்டு தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் உணர்வுக்குள்ளும் சிறகடிக்க வேண்டும். என் சீரிய சிந்தனை வண்டின் ரீங்காரமாய் இங்கு ஒலிக்கும். தமிழ் மலருக்குள் நான் பறப்பேன். இந்தத் தமிழ்ப் பறவையை வாழ்த்துங்களேன்.
