குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Thursday, March 27, 2008

என் சிறகுகள்... ...


‘முயற்சி திருவினையாக்கும்’ என, நான் கற்ற பாடம், 2 ஆண்டுகளில் மறந்து போனது.SSLC-க்குப்பின் 2 ஆண்டுகள் கழித்து +2 பொதுத்தேர்வில், தாராளமாய் ‘pass’ செய்துவிட்டேன். ஆனால், எடுத்த மார்க்குகளில் தான் கஞ்சத்தனம். 1200-க்கு, 1000 கூடத்தாண்டவில்லை.1000-த்தைத் தொட, இருந்த 6 பாடங்கள் போதவில்லை.

அது என் குற்றமுமில்லை.தமிழகத்தின் கல்வித்துறை, ‘பொதுத்தேர்வில் வண்டின் போராட்டங்கள்’ என்று ஒரு 7-ஆம் பாடம் வைத்திருந்தால், ‘வெற்றி எட்டுத்திக்கும் எட்ட’ முரசு கொட்டியிருப்பேன். போகட்டும் விடுங்கள்! அது பழையகதை. (இங்கே, ‘கண்ணீர் விட்டு உருண்டு உருண்டு அழும்’ Emoticon ஒன்று இருப்பதாய்க் கற்பனை செய்து கொள்ளுங்கள்)

ஆனால், நினைத்த கல்லூரியில், நினைத்த இடம் கிடைக்க அது தடையாய் இல்லை. (எது? என் மார்க்குகள் தான்).

-நன்றி! என் ‘மார்க்’-கிற்கு முன்னால் நின்ற என் தந்தையின் முயற்சிக்கு.

நிற்க!

இந்த வண்டின் பயணத்தில், Highlight செய்யும்படியான் Hi-Tech விஷயங்கள் சில உண்டென்றால், அதில் என் தாய் தந்தைக்கு, அதிகப்பங்குண்டு.

20 வருடங்களுக்கு மேலாகப் பெற்றபிள்ளைகளை, கண்ணுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, ஒரு கடுசொல் கூடக்கூறாத, தாய் தந்தை யாருக்கு உண்டென்று, கை துக்கச்சொல்லுங்கள் – வண்டு, கை, கால் எல்லாம் தூக்கி, எல்லோருக்கும் மேலே பறந்து கொண்டிருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்து, ஒரே ஒரு முறை, ‘ஜந்து விரலும்’ பதியுமாறு ஜந்தாப்பில் அடிவாங்கியது ஒன்று தான், தந்தையின் தண்டனையாய் நினைவிருக்கிறது. (ஜந்தாப்பில் வண்டின் கல்வி நிலை தெரிந்தவர்கள், இதற்கு வருத்தப்பட மாட்டார்கள்.)

எனக்கு நினைவு தெரிந்து,

‘தம்மால் இயன்றதனைத் தாமியற்றிக் கொள்ளாதார்
வெந்நீரும் ஆடாதார் பாய்பவோ தீ’

என்று, என் சோர்விலா சோம்பேறித்தனத்தைக் கூட, அழகு தமிழில்த் தான், என் தாய் திட்டியதாக, என் நினைவில் இருக்கிறது.

என் தாயின் மாறாத புன்னகையும் என் தந்தையின், கடுமையில்லாத மொழியும், எனக்கும் என் உடன்பிறப்பிற்கும், வானத்தின் எல்லை தாண்டிப்பறப்பதற்குக் கிடைத்த சிறகுகள்.

ஒலிக்கும்... ...

0 Comments:

blogger templates 3 columns | Make Money Online